மேலும்

கீத் நொயாரை கடத்திய மேஜர் புலத்வத்தவுக்கு இராஜதந்திரப் பதவி வழங்கிய கோத்தா

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்த, முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல் சிறிலங்காவுக்கு இரண்டு மாதப் பயணம்

இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா – ஜேவிபி

போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு செயலிழந்து விட்டது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சிறிலங்காவின் பலம் வாய்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது முற்றாக செயலிழந்து விட்டதாக போர்க்குற்றம்சாட்டப்பட்ட – ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு

கடந்தகால  சிறீலங்கா அரசாங்கங்கள் காலம் தாழ்த்தல், மென்மைப்படுத்துதல், நீர்த்துப்போகச் செய்தல் போன்ற உத்திகள் ஊடாக உள்நாட்டு பேரினவாத சனநாயக பொறிமுறைகளை கையாண்டு சர்வதேச மனிதாபிமான தலையீட்டிலிருந்து தமது நிலைகளை தக்கவைத்து கொண்டு வந்திருக்கின்றன.

போர் முடிந்த பின் முதல் முறையாக சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் சரிவு

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தொடர்ச்சியாக அதிகரித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.

முப்படைகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – பலாலியில் சிறிலங்கா அதிபர் உறுதி

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கான பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்ய சிறிலங்கா முயற்சி

ஜெனிவாவில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்ற விடயத்தை நீ்ர்த்துப் போகச் செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருணா, பிள்ளையான் மீது எந்த நடவடிக்கையும் இல்லை – ஐ.நா அறிக்கையில் அதிருப்தி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, கருணா மற்றும் பிள்ளையான் மீது இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துலக சமூகத்துக்கு முதுகெலும்பைக் காட்டிவிட்டேன் – சிறிலங்கா அதிபர்

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.