மேலும்

கோட்டே தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு – தேவதாசனுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

கொழும்பு- கோட்டே தொடருந்து நிலையத்தில், நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட கனகசபை தேவதாசனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல் – ஜி.பார்த்தசாரதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் சிறிலங்கா கையளிக்கவுள்ளதானது, இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, புதுடெல்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் வருகை பேராசிரியரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

அஜித் டோவல் மீது சீறும் கோத்தா – ஆட்சி மாற்றத்துக்கு தூண்டியவராம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் சீனா தொடர்பான இறுக்கமான நிலைப்பாடு தான், 2014இல் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியாவைப் பணியாற்றச் செய்தது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் கறுப்பு ஆடுகளும் இருக்கின்றன – மங்கள சமரவீர

சிறிலங்கா இராணுவத்தில் கறுப்பு ஆடுகளும் இருக்கின்றன என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ரவிராஜ் கொலை வழக்கு – விடுவிக்கப்பட்ட 3 கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்க சிஐடிக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடியின் சிறிலங்கா பயணம் – மகாநாயக்கர்களுக்கு இந்திய தூதுவர் விளக்கம்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று கண்டியில் மகாநாயக்கர்களைச் சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

காங்கேசன்துறையில் ஐ.நாவின் இராணுவ வாகனத் தொடரணி

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்ளவுள்ள சிறிலங்கா இராணுவ அணிக்கான பாரிய களப் பயிற்சி ஒத்திகை காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருந்ததா என்று தன்னால் உறுதியாகக் கூற முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போரின் போர்வையில் நடந்த பொதுமக்களின் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது – சந்திரிகா

போரில் ஈடுபட்ட போர்வையில், அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த எவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், அவர்கள்  பொறிமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும் என்று  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.