மேலும்

நோர்வே தமிழ் 3இன் தமிழர் மூவர்-2017 – இளைய பல்துறை ஆளுமையாளர்கள் மதிப்பளிப்பு

Entrepreneurship எனப்படும் துறையில் மிக இளவயதில் (19) தடம்பதித்து வரும் மயூரன் லோகநாதன், மருத்துவரும் உலகளாவிய சுகாதாரம் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு சார்ந்து மிகுந்த ஈடுபாடு உள்ளவரான ஆரணி மகேந்திரன், தமிழ் பாரம்பரிய வாத்திய இசைவடிவங்களுடன் மேற்கத்திய இசைவடிங்களை இணைத்து புத்தாக்க இசைப்படைப்புகளை வழங்கி வரும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் 3இன் தமிழர் மூவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தீயுடன் சங்கமமானார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி – பெரும் திரளானோர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் சடடவாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

உதவிப்பொருட்களுடன் சீனாவில் இருந்து சிறிலங்காவுக்கு விரையும் மூன்று கப்பல்கள்

வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீனாவின் கப்பல்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அனுப்பிய மூன்றாவது உதவிக் கப்பலும் கொழும்பு வந்தது

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு மூன்றாவது இந்தியக் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

பாகிஸ்தான் போர்க்கப்பலில் உதவிப் பொருட்களுடன், மீட்புக் குழுக்களும் கொழும்பு வருகை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அவசர உதவிப் பொருட்களை வழங்கினார் இஸ்ரேலிய தூதுவர்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தக் கோரி பாரிய போராட்டம்

கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீழ்ந்து நொருங்கிய உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை

வெள்ள மீட்பு நடவடிக்கையின் போது, காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகிய எம்.ஐ.17 உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப்பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர?

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானோர் தொகை 180 ஆக அதிகரிப்பு

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 109 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.