மேலும்

சிறிலங்கா படைகளுக்கு கருவிகள், தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்கா இணக்கம்

சிறிலங்காவில் அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை  மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினருக்கு, அமெரிக்கா ஆதரவையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

கட்டாருடன் இராஜதந்திரத் தொடர்புகளை துண்டித்துள்ள அரபு நாடுகள் – சிறிலங்காவுக்கும் நெருக்கடி

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை

பளையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் பங்களாதேஷ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியை சேவையில் இருந்து நீக்குகிறது சிறிலங்கா விமானப்படை

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது பலத்த சேதமடைந்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி சேவையில் இருந்து முற்றாக நீக்கப்படும் என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம்

ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்

வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 உலோகப் பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது அமைப்புக்கள் எதிர்த்துள்ளன. இந்த வீடுகள் தமக்கு வேண்டாம் என மக்கள் கூறிவரும் நிலையில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண  அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

துறைமுக நகரத்தை கொழும்புடன் இணைக்க நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், தொடருந்துப் பாதை

1.5 பில்லியன் டொலர் செலவில் சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தை, கொழும்புடன் இணைப்பதற்கான நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், மற்றும் தொடருந்துப் பாதை என்பன அமைக்கப்படவுள்ளன.

ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள்

சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.