மேலும்

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் சிறிலங்கா கடற்படைத் தளபதி இறுதிக்கட்ட ஆய்வு

இந்தியாவிடம் கொள்வனவு செய்யப்படும், ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அதிகாரபூர்வமாக சிறிலங்காவிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி அதனை இறுதிக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தினார்.

சென்னை அருகே தொடங்கியது அதிநவீன போர்க்கப்பல்களின் பாரிய கூட்டுப் பயிற்சி

மலபார் பயிற்சி எனப்படும், இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகளின் பாரிய  கூட்டுப் போர் ஒத்திகை, வங்காள விரிகுடாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டை அடுத்து வடமராட்சியில் பதற்றம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு

வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள காவல்துறையினரின் காவலரணும், நெல்லியடியில் காவலர் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

மகாநாயக்கர்களுடன் இப்போது சந்திப்பு இல்லை – சுமந்திரன்

பௌத்த பீடாதிபதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகச் சந்திக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் பலியானதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு தமிழிசைக்குத் தடை விதித்த பாஜக மேலிடம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தை கைவிட்டு அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.

தேங்காயை இறக்குமதி செய்யும் பரிதாப நிலையில் சிறிலங்கா

தேங்காய் கொள்கலன் ஒன்றை பரீட்சார்த்த அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு சிறிலங்காவின் பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

இந்தியாவினதும் பாஜகவினதும் ஆதரவைக் கோரினார் வடக்கு மாகாண முதல்வர்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கும், தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதற்கும், இந்திய மத்திய அரசாங்கத்தினதும், பாஜகவினதும் ஆதரவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருக்கிறார்.

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு சேவை நீடிப்பு

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு வரும் செப்ரெம்பர் மாதம் வரையில், சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கான அனுமதியை அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியின் எதிர்ப்பை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்கா கடற்பரப்பில் அடிமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறையைத் தடைசெய்யும் நாடாளுமன்றத் தீர்மானத்துக்கு, தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ள எதிர்ப்பை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.