மேலும்

நேற்றுமாலை புதுடெல்லி வந்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியை வந்தடைந்தார். அவரை இந்திராகாந்தி விமான நிலையத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், புதுடெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா உள்ளிட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்.

ஊடகவியலாளர்கள் சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு மத்திய, ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர், அலிஸ் வெல்ஸ், வலியுறுத்தியுள்ளார்.

லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார்.  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திலக் மாரப்பன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அபராதம், இழப்பீடு செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாக இவர்களின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் தொடங்கியது இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான 5ஆவது கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சானி அபேசேகர

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு

100இற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.