மேலும்

வியட்னாம் தீவு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட சிறிலங்காவின் ஜெனரல்கள்

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும், வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படையினர் எவரும் போர்க்குற்றம் புரியவில்லை – என்கிறார் சிறிலங்கா அமைச்சர்

முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருமே, எந்தவொரு போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று சிறிலங்காவின்  வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ண முடிவு

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

ஐ.நாவின் தடைகளை மீறியது சிறிலங்கா – கண்காணிப்புக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவைக் காரணம் காட்டி நழுவுகிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் விக்கி குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்தல, கொழும்பு துறைமுக திட்டங்களை விரைவுபடுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்

மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்ற இருதரப்பு  திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு, சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மக்கள் அதிகாரப் பகிர்வையோ, தனிநாட்டையோ கோரவில்லையாம் – கமல் குணரத்ன கூறுகிறார்

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை என்று, போர்க்குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது – இந்தியாவுக்கு சிறிலங்கா நிபந்தனை

மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபரின் சகோதரர் சிறையில் அடைப்பு

பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.