மேலும்

அம்பாந்தோட்டையில் சீனாவின் தலையீடுகளால் பாதிப்பு இல்லை- இந்திய கடலோரக் காவல்படை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு நன்மை தரும் – சம்பந்தன், சுமந்திரன் வரவேற்பு

தமிழ் மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு,செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்றில் படையினரை நிறுத்த அனுமதியேன் –சிறிலங்கா அதிபர் உறுதி

சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை, சிறிலங்கா படையினரை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு மிதிவண்டி, மாட்டுவண்டிச் சவாரி

பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு மிதிவண்டியில் வந்தனர்.

எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை

சிறிலங்காவிற்கு புதியதொரு அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றமோ செய்யப்பட வேண்டிய தேவையில்லை என மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் அறிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு தடை

லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சிறிலங்காவில் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்த இணைத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாத நிலை காணப்பட்டது.

தமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டு- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மோடியை முந்திய டுபாய் ‘லேடி’

டுபாயில் இருந்து “நெவஸ்கா லேடி” என்ற எண்ணெய் தாங்கி கப்பல் 40 ஆயிரம் மெட்றிக் தொன் பெற்றோலுடன், நேற்று மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 3 மணியளவில், நாடாளுமன்றத்தில அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.

எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதாக மைத்திரியிடம் மோடி வாக்குறுதி – கப்பலை அனுப்பினார்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.