மேலும்

கபொத உயர்தரத் தேர்வு – ஹாட்லி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த கபொத உயர்தரத் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பௌதிக விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கேப்பாப்புலவில் 133 ஏக்கர் காணிகள் இன்று இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பு

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய பல்கலைக்கழகங்களில் 175 சிறிலங்கா மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

2018-19 கல்வியாண்டில், இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு, சிறிலங்கா மாணவர்கள் 175 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடத் தடை

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது, உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தேர்தல் முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – புலம்பும் மகிந்த

2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சனிக்கிழமை ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் 30ஆம் நாள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனா வழங்கிய 292.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியில் வைப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சம்பந்தனிடம் நலம் விசாரித்தார் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.