மேலும்

இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதி

இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மகிந்த ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற மோசமான செயல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

மகிந்தவின் பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றிய சிறிலங்கா காவல்துறை

மதவாச்சியில் சிறிலங்கா பொதுஜன முன்னணி செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் படங்களுடன் கூடிய தேர்தல் பரப்புரைப் பதாகைகள், சுவரொட்டிகள் சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீனாவின் தேசியக்கொடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம்

கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் மர்மமான தொற்றுநோய் மரணங்கள் நிகழவில்லை – ஆய்வுகளில் உறுதி

அண்மையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சந்தேகத்துக்கிடமான மரணங்கள், இயற்கையானவையே என்றும், அதில் எந்த மர்மமும் இல்லை என்றும், சிறிலங்கா சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் சிறப்பு அறிக்கையை வெளியிடுகிறார் சிறிலங்கா அதிபர் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாக, தனிப்பட்ட அல்லது பொது நிதியில் இருந்து பணத்தையோ அல்லது பொருள் மானியத்தையோ வழங்கும் வேட்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

நள்ளிரவுடன் காலாவதியானது புரிந்துணர்வு உடன்பாடு – கூட்டு அரசு நிலைக்குமா?

கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு – இன்று தென்படும்

வழக்கத்தை விட 30 வீதம் அதிக பிரகாசமான சந்திரனை இன்று காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.