டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவு – 160 ரூபாவைத் தொடுகிறது
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி விட்டார் என்று, அமைச்சர் அஜித் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினார் என்பதை, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்புக் கோரவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான, மே 18 ஆம் நாளை, தமிழின அழிப்பு நாளாக வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.
சிறிலங்கா- சீனா இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க சில குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.