மேலும்

வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்கவுள்ளனர்.

எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் ஜனவரியில் தேர்தல்

எல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால்,  ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கீத் நொயாரைக் கடத்தியவர்களை மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும் – அஜித் பெரேரா

ஊடகவியலாளர் கீத் நொயாரை கொலை செய்யாமல் காப்பாற்றியதற்காக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி கூற வேண்டும் என்று சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில்- புதுடெல்லியில்  இன்று மாலை காலமானார்.

குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில் முட்டி மோதும் மத்திய – மாகாண அரசுகள்

குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில், சிறிலங்காவின் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

நேவி சம்பத் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவிடம் நாளை விசாரணை – வாக்குமூலம் அளிக்க இணங்கினார்

‘த நேசன்’ நாளிதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை வாக்குமூலம் அளிப்பதற்கு இணங்கியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம் – இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நேவி சம்பத்தை 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியை எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொச்சிக்கான பயணங்களை இடைநிறுத்தியது சிறிலங்கன் விமானசேவை

கொழும்பு- கொச்சி நகரங்களுக்கிடையிலான விமான சேவையை சிறிலங்கன் விமான சேவை வரும் சனிக்கிழமை வரை இடைநிறுத்தியுள்ளது.