மேலும்

13ஆவது திருத்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் – கொழும்பில் மோடி

சிறிலங்காவில் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தியுள்ளார்.

மோடி – மைத்திரி பேச்சுக்களின் முடிவில் 4 உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் முடிவில் நான்கு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு

சிறிலங்காவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

‘உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது’ – ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாய்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

கண்ணீரோடு கலங்கி நிற்கிறோம் அரவிந்தன் அண்ணா…..! – நினைவுப் பகிர்வுகள்

புதினப்பலகையின்  ஆசிரியரும், புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியுமான மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் பிரிவுத்துயரை, வெளிப்படுத்தும் புதினப்பலகை குழுமத்தினரின் நினைவுப் பகிர்வுகள்…..

நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது.

அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.