மேலும்

இந்தியாவின் தலையீடுகளை சகித்துக் கொள்ள முடியாது – முன்னாள் அமைச்சர் கூறுகிறார்

இந்திய ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்தமையே முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் என்று, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மோடியின் ஆலோசனை சிறிலங்காவுக்குப் புரிந்திருக்கும் – வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக விசாரணைக்கு எதிராக சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறதாம் – சந்திரிகா கூறுகிறார்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி கைது

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற உயர்அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் – அதிபரின் அதிகாரங்கள் குறையும்

சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றைக் குறைக்கவும், தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வரவும், வழி செய்யும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு சிறிலங்காவின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

தாமரைக் கோபுர நிர்மாணமும் மீளாய்வு – சீனாவுக்கு அடுத்த சோதனை?

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும், தாமரைக் கோபுரம் நிர்மாணப் பணி குறித்தும் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல்தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – மோடியிடம் கோரினார் விக்னேஸ்வரன்

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கையளித்த மனு

தலைமன்னார் இறங்குதுறைக்கு நேற்று வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையினால், மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலியில் மோடிக்காக காத்திருந்த இராட்சதப் பறவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.