வித்தியா கொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு அழைப்பு
புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டவாளர்கள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.