மேலும்

வித்தியா கொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு அழைப்பு

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டவாளர்கள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எல்லா மாகாணங்களில் படையினரை சம அளவில் நிறுத்த வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் கொந்தளிக்கிறது குடாநாடு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பவிடும் முயற்சிகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட போராட்டங்களால் யாழ்.குடாநாட்டில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

படையினரிடம் சரணடைந்து காணாமற்போன 110 புலிகளின் விபரங்களை வெளியிட்டார் யஸ்மின் சூகா

போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து  காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், தளபதிகள் 110 பேரின் விபரங்களை, ஐ.நாவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.

பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியேன்- மைத்திரி வாக்குறுதி

தேசிய பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் என்றும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை – சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நடத்தப்பட்ட நினைவுநாள் நிகழ்வு தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று, காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி ரவை வடிவ தீபத்தை ஏற்றி வைத்து போர் வெற்றியை கொண்டாடினார் மகிந்த

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜெகத் டயஸ் நியமனம் – கருத்து வெளியிடாமல் நழுவினார் ஐ.நா பேச்சாளர்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கருத்துக்காக காத்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – ரணில் அறிவிப்பு

வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.