மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும்,  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு மூன்று மாத சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத சேவை நீடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியாக பெயரை மாற்றியது ஜாதிக ஹெல உறுமய

சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி, தனது பெயரை, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என மாற்றிக் கொண்டுள்ளது. சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தகவல் சேகரிக்கிறது இந்தியா

யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் முயற்சியில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

மொஸ்கோவுக்கு அழைக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஸ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவுக்கு இடமளித்ததால் வெளியேறினார் சம்பிக்க – உள்ளே வந்தார் தினேஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சிறுபான்மையின மக்களுக்கு மைத்திரி துரோகம் செய்யக் கூடாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மகிந்த ராஜபக்சவைப் போட்டியிட அனுமதிப்பதன் மூலம், தன்னை அதிகாரத்துக்கு கொண்டு வந்த சிறுபான்மையின மக்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்யக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் முடிவினால் மேற்குலக இராஜதந்திரிகள் நிலைகுலைவு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதானது, கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் ஒதுக்கீடு குறித்து நாளை இறுதி முடிவு – இரா.சம்பந்தன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, நாளை முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

11 கிராம அதிகாரிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பினார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, குடும்ப உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்தமை ஆகிய காரணங்களுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அதிகாரிகள் 11பேரை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளார்.