மேலும்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியானது

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ஆதரவு அணியின் பலம் 60 ஆக குறைந்தது – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மறுக்கிறார்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் 60 ஆக குறைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நேற்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், 60 பேர் மட்டும் பங்கேற்றிருந்தனர்.

மைத்திரியுடன் பான் கீ மூன் தொலைபேசியில் பேச்சு – ஐ.நா அறிக்கை குறித்து ஆலோசனை?

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பு வந்தது ஐ.நா விசாரணை அறிக்கை – நாளை மைத்திரியிடம் கையளிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில் – சிறிமாவோவின் சாதனையை சமப்படுத்துகிறார்

சிறிலங்காவின் புதிய பிரதமராக தேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட மேற்கு நாடுகள், சீனா விருப்பம்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு அங்கீகாரம்

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின  பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு – வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்

சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் யாருக்கு?- சம்பந்தன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்பு

புதிதாகத் தெரிவாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.