மேலும்

மைத்திரியும் மூன்று நாள் பயணமாக இந்தியா செல்கிறார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்கு மூன்ற நாள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஆதரவு இல்லையென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது – சரத் பொன்சேகா

30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய ஆதரவை மறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் ரணில் – முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 14ஆம் நாள் தொடக்கம் 16ஆம் நாள் வரை இந்தியாவுக்கு, தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 அமைச்சர்கள், 45 பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாயன்று பதவியேற்பு

சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தில் மேலும் 5 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா அறிக்கை கிடைக்க முன்னரே பதிலளிக்கும் குழுக்களைத் தயார்படுத்தியது சிறிலங்கா

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை இன்னமும், அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தொடர்பாக பொது நிலைப்பாடு – உடன்பாட்டில் கையெழுத்திடவும் ஐதேக, சுதந்திரக் கட்சி முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள் தொடர்பாக, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டவுள்ளதுடன் இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளன.

வரும் 15ஆம் நாள் புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 15ஆம் நாள் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த பிரதமராகியிருந்தால் பெருமளவு கொலைகள் நிகழ்ந்திருக்கும் – சந்திரிகா

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், சிறிலங்காவில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சிறிலங்காவில் இனி என்ன?

ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும்? தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன?

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.