இந்திய- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்காவுக்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்பது புதியதல்ல என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் அனைத்துலக நீதிபதிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஐ.நா பொது அமர்வுக்குப் புறம்பாக நேற்றைய தினம் இடம்பெற்றது.
சிறிலங்கா மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையில் அண்மைய காலங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரை யாழ்ப்பாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நாளை சந்திக்கவுள்ளனர்.
நாட்டின் நீதிமுறைமையில் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கான மிகப் பாரிய செயற்பாட்டை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. இவ்வாறானதொரு சூழல் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்டது.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ. நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.