மேலும்

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க இந்தியா முயற்சி – உறுதிப்படுத்துகிறது இந்திய ஊடகம்

சிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனந்தசங்கரியுடன் கைகோர்க்கிறார் கருணா – தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார்

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்

சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர்.  ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.

உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் குடியுரிமை பறிப்பு – பரணகம ஆணைக்குழு பரிந்துரை

முன்மொழியப்பட்ட உள்நாட்டு பொறுப்புக்கூறும் செயல்முறைகள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களின் குடியுரிமையைப் பறிக்க, காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

தன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த

தன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வெள்ளைக்கொடி, பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைகள் – விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

வெள்ளைக் கொடி விவகாரம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

மூன்று முக்கிய விவகாரங்கள் – கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்

நீண்டகாலத்திற்கு பின்னர்  நேற்றுக் கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்து, நீண்ட நேரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம் – இரா. சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பையும், அழுத்தங்களையும் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே அதிபர் மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம் – மகிந்த ராஜபக்ச

அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.