மேலும்

பிரிவு: செய்திகள்

அடுத்தவாரம் சீனா செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வரும் 13ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச பீஜிங் செல்லவுள்ளதாகவும், வரும் 16 ஆம் நாள் வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சம்பந்தனுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க சீனா செல்கிறாரா மகிந்த? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீனா தனது அரசியல் கருத்தியல்களைத் தளமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கோட்பாட்டைத் திட்டமிட்டது. பின்னர், இக்கோட்பாடானது சீனாவின் பொருளாதார நலன்களை மையப்படுத்தி வரையறுக்கப்பட்டது.

பொறுப்புக்கூறல் செயல்முறை அடுத்த வாரம் ஆரம்பம் – சிறிலங்கா அறிவிப்பு

போர் தொடர்பான உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயல்முறைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீீர தெரிவித்துள்ளார்.

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் சிறிலங்கா விமானப்படை விமானிகளும் இருந்தனர்

பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, சிறிலங்கா விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக, தகவல் வெளியிட்டுள்ளார் இந்திய இராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளை பணியக தளபதி லெப்.ஜெனரல் கே.ஜே.சிங்.

சம்பந்தன், சந்திரிகாவையும் இன்று சந்திக்கிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்கு இன்று ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்டவர் பெயரை சந்தேகநபர்கள் வெளியிட்டனர் – விசாரணையில் திருப்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தும் உத்தரவை பிறப்பித்தவரின் பெயரை, விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேக நபர்கள் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர் விமானங்கள் குறித்து பாகிஸ்தானுடன் பேசவேயில்லை – என்கிறார் பாதுகாப்புச்செயலர்

பாகிஸ்தானிடம் இருந்து, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதத்தை முறியடிக்க சிறிலங்கா படைகள் தயார் நிலையில் – பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்கினால் அவர்களை கண்டறிய சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.