மேலும்

பிரிவு: செய்திகள்

நோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் தமிழர் மூவர் – 2016 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 பெண்கள் அல்லது ஆண்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம

தமது ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களுக்கு நீடித்தால், காணாமற்போனோர் தொடர்பான 20 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம.

தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர் துறப்பாராம் மகிந்த

அமெரிக்க வங்கிகளில் தனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து உதவுவோம் – என்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் மனித உரிமையை பேணவும் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை பலப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அமெரிக்காவின் உதவித் திட்டங்களுக்கான ஆசியப் பிராந்திய உதவி நிர்வாகி ஜொனாதன் ஸ்டிவர்ஸ் தெரிவித்தார்.

ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நாவில் கொடுத்த வாக்குறுதியை சிறிலங்கா காப்பாற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் போர்க்கப்பல்களுடன், சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சி

நான்கு நாள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற நாசகாரி போர்க்கப்பலும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வரும் வரை அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை?

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, சிறைகளில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுவிக்க முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் இதயத்தை வென்றால் மட்டுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- சிறிலங்கா அதிபர்

உட்கட்டமைப்பு அபிவிருத்தியால் மட்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.