மேலும்

பிரிவு: செய்திகள்

வடக்கிலுள்ள மக்களுக்கு உதவுவதாக மைத்திரியிடம் ஜேர்மனி அதிபர் உறுதி

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், வடக்கிலுள்ள மக்களின் நலன்களுக்காக ஜேர்மனி அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சரணடைந்தோரின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு 58ஆவது டிவிசனுக்கு நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது, தம்மிடம் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரிக்கு  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

லசந்த கொலை சந்தேகநபர்களின் மாதிரி உருவப்படங்களை வெளியிட்டது காவல்துறை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரி உருவப்படங்களை, சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஜேர்மனி அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யோசிதவைப் பிணையில் விடுவிக்கும் முயற்சி தோல்வி – ஏமாற்றத்துடன் திரும்பிய மகிந்த

சிஎஸ்என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்சவை , கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்க மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

இந்தியாவைத் திருப்திப்படுத்த கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் – எச்சரிக்கிறார் பசில்

இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

மகிந்த வெளியே போவதை தடுக்கமாட்டோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்று முடிவு செய்யும் சுதந்திரம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.

யார் எதிர்த்தாலும் இந்தியா, சீனாவுடன் உடன்பாடு செய்வோம்- சூளுரைக்கிறார் சிறிலங்கா பிரதமர்

யார் எத்தகைய போராட்டங்களையும் நடத்தினாலும், அடுத்த மாதம் இந்தியாவுடனும், சீனாவுடனும் உடன்பாடுகளை கைச்சாத்திட்டே தீருவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பிரகீத் வழக்கில் புதிய திருப்பம் – அரச சாட்சிகளாக மாறிய முன்னாள் புலிகள் இரகசிய வாக்குமூலம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள்  உறுப்பினர்கள் அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ளனர்.

தமிழர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் இழப்புகளை தவிர்த்திருக்கலாம் – ஜயம்பதி விக்கிரமரட்ண

தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.