மேலும்

பிரிவு: செய்திகள்

சுதந்திரக் கட்சி மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் – மகிந்த அணியை களையெடுக்கும் அடுத்த நகர்வு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவிக்கு கடும் போட்டி – எஸ்.பிக்கு வாய்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால காலமானதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க பலத்த போட்டி எழுந்துள்ளது.

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களைக் கட்ட சீனா விருப்பம்

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக, இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் செயலர் திடீரென பதவி நீக்கம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் பதவியில் இருந்து லசிலி டி சில்வா திடீரென நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் நேற்று இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சமஸ்டியை வழங்குமாறு சிறிலங்காவிடம் கோர மறுத்தார் ராஜீவ் காந்தி – வரதராஜப்பெருமாள்

சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றோ, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட வரைவதிலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்துமாறோ சிறிலங்கா அரசாங்கத்தை, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்.

அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – இருதரப்பு உறவைப் பலப்படுத்தும் முக்கிய வாய்ப்பு

அமெரிக்க -சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடலானது சிறிலங்கா புதிய திசை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

காணிகளை விரைவாக ஒப்படைக்க வலியுறுத்துகிறது அமெரிக்கா – கூட்டறிக்கையில் இணக்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மறைந்து கிடந்த மகிந்த அரசு பெற்ற 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் – ஒரு ஆண்டுக்குப் பின் அம்பலம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் நாடு திரும்புவார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன

சிங்கப்பூர் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னசவின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.