மேலும்

பிரிவு: செய்திகள்

லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்

சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே  அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார்.

வெளியேற்றினால் புதிய கட்சி விரைவில் உருவாகும்- எச்சரிக்கிறார் மகிந்த

ஹைட் பார்க்கில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினால், உடனடியாக புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

பிரகீத் கடத்தல் முக்கிய சந்தேகநபரான லெப்.கேணல் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் சம்மி குமாரரத்ன நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீன முதலீட்டாளருடன் இணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா தீவிர முயற்சி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீன முதலீட்டாளருக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்தில் அமெரிக்கா தலையீடு – கூட்டு எதிர்க்கட்சி விசனம்

அரசியலமைப்புத் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்கா கருத்தரங்கை நடத்துவது குறித்து, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுபினர் தினேஸ் குணவர்த்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீளத்திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர், கடந்த ஆண்டு மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீள இயக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரிக்க அனுமதியோம் – சம்பிக்க ரணவக்க

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருக்கும் வரையில், எந்தவொரு சூழ்நிலையிலும், போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரணை செய்ய அனுமதிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மின்மாற்றிகள் வெடிப்பு குறித்து விசாரிக்க நாளை வருகிறது ஜேர்மனி நிபுணர் குழு

பியகம மற்றும் கொட்டகொட உபமின் நிலையங்களில் வழமைக்கு மாறான முறையில்- இரண்டு மின் மாற்றிகள் வெடித்தமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜேர்மனியில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று நாளை சிறிலங்கா வரவுள்ளது.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 1

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.