மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவுக்கு கல்லீரல் பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை, இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.

பாதாள உலகக் குழுவில் சாள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் போராளி?

கொழும்பில் பாதாள உலகக் குழுவுடன் இணைந்து செயற்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகப் பதிவேடுகளை சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

மின்னேரியா இராணுவ முகாமின் எரிபொருள் விநியோகம் தொடர்பான பதிவேடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஹோமகம பதில் நீதிவான், உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறது ஈபிடிபி- டக்ளசுக்கு அமைச்சர் பதவி?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி குழுவினருக்கும் இடையில், அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தெற்காசியாவின் உயரமான புத்தர் சிலை சிறிலங்காவில் – திறந்து வைக்கிறார் மைத்திரி

தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, மத்துகமவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும், ஏப்ரல் 23ஆம் நாள்- சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரிக்க சிறிலங்காவுக்கு ஐ,நாவும் உதவி

அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்பவும், ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு அமைவாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, விரிவான தீவிரவாத முறியடிப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு, சிறிலங்காவுக்கு உதவுவதாக ஐ.நாவின் தீவிரவாத முறியடிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணியகம் வாக்குறுதி அளித்துள்ளது.

ஆழ்கடல் கண்காணிப்பு – வெளிநாடுகளின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்துகிறது சிறிலங்கா

மாலைதீவுக்கும், மலாக்கா நீரிணைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை பாதுகாப்பான கடற்பாதையாக மாற்றும், சிறிலங்கா கடற்படையின் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்த பல்வேறு நாடுகளின் உதவியை சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்ளவுள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்குமா ஐரோப்பிய ஒன்றியம்? – நாளை மறுநாள் முடிவு

சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதித் தடையை நீக்குவது குறித்து தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது.

பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.