கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சு போர்க்கப்பல் – புதிய உறவுகள் துளிர்க்கின்றன
சிறிலங்காவுடன் உறுதியான கடற்படை கூட்டு ஆரம்பிக்கப்படுவதற்கான தருணம் இதுவேயாகும் என்று, பிரெஞ்சுக் கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுடன் உறுதியான கடற்படை கூட்டு ஆரம்பிக்கப்படுவதற்கான தருணம் இதுவேயாகும் என்று, பிரெஞ்சுக் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதுவர் சமந்தா பவர்.
மூத்த ஊடகவியலாளர் டி.சிவராம் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி வழங்கக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு, 92ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று நடக்கவிருந்த சந்திப்பு, கடைசி நேரத்தில் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் பெல்-206 ரக உலங்கு வானூர்தி ஒன்று ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.