ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஓமல்பே சோபித தேரர்
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, ஓமல்பே சோபித தேரர் நேற்று அறிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, ஓமல்பே சோபித தேரர் நேற்று அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்கள், மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்து நடக்கவுள்ள எந்தவொரு அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பிரித்தானியா நாடாளுமன்றத்தின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அலோக் சர்மா, பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்துக்கு அம்பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் தனது அனைத்துலக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 26ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.
சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக, தரன்ஜித்சிங் சந்து, நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.