நாளை மறுநாள் மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகிய வர்தா புயல் தற்போது சென்னை அருகே கரையைக் கடந்து கொண்டிருப்பதால், மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி பெரும் சேதங்களை விளைவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா விமானப்படைக்கு, பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.
‘பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மீள்சமப்படுத்தும். இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம்.
சீன படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி தம்மைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான், சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
வடக்கு மாகாணசபை தனியான தேசிய கீதம் ஒன்றை இயற்றவுள்ளதாக, சிங்கள நாளிதழான, திவயின நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிராகரித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.