மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் – ஐ.நா

ஐ.நா அமைதிப்படைக்கு தமது படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைதிப்படைக்கு தமது வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து 17 பேர் பலி

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் நேற்று பிற்பகல் குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

நாளை வியட்னாம் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை அங்கிருந்து வியட்னாமுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்

‘எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.

சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

சீனாவை எதிர்கொள்வதற்கு சிறிலங்காவைப் பலப்படுத்துகிறது ஜப்பான்

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று ஜப்பானிய ஊடகமான The Asahi Shimbun செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இருந்து ‘பாதுகாக்கப்பட்ட’ சிறிலங்கா படையினர் – ஏபி

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்

எம்மிடையே உள்ள காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு இந்தச் சித்திரைப் புத்தாண்டில்  பாடுபட வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான்

மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது.

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் பங்கு போடுகிறது சிறிலங்கா

திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து, கூட்டாக இயக்கவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.