மேலும்

பிரிவு: செய்திகள்

மைத்திரி அணியினரை தோற்கடிக்க நரிகளாக மாறி ஊளையிடும் மகிந்த அணியினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்க, அவர்களின் பரப்புரையை ஊளையிட்டுக் குழப்பும் புதிய உத்தியை மகிந்த ராஜபக்ச அணியினர் கையாளத் தொடங்கியுள்ளனர்.

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் ராஜபக்சவினரைக் காப்பாற்ற முடியாது – ராஜித சேனாரத்ன

போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவினரை அனைத்துலக விசாரணைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றாலும், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்திருந்தால் அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

மகிந்தவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இணங்காதாம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இணங்காது என்று, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

உள்நாட்டு விசாரணை நடத்த சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டுமாம் – மகிந்த சமரசிங்க கூறுகிறார்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, எந்த அனைத்துலகத் தலையீடுகளும் இல்லாத உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க.

சிறிலங்காவின் மிகஉயர்ந்த கட்டடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்காவில் 96 மாடிகளைக் கொண்ட, மிகஉயரமான கட்டடத்தை கொழும்பின் ராஜகிரிய பகுதியில், இந்திய நிறுவனம் ஒன்று, அமைக்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போவாராம் – ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது

சமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க.