மேலும்

பிரிவு: செய்திகள்

டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானிய சட்ட நியமச் சபை விசாரணை

சிறிலங்காவில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவரான சேர் டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானியாவின் சட்ட நியமச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா தேர்தலைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது கொமன்வெல்த்

சிறிலங்காவின் தேர்தலைக் கண்காணிக்க, மோல்டா நாட்டின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜோர்ஜ் அபேலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவை அனுப்பி வைப்பதாக, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால்  மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தன்னாட்சிக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும் இலங்கைத் தமிழர்கள் – ஏஎவ்பி

தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.

பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார். இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு  வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது வட மாகாணம் – சிங்களவர்களை உருவேற்றுகிறார் சங்கநாயக்கர்

யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.

சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கை

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில்  சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடு

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.