மேலும்

பிரிவு: செய்திகள்

விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் படைத் தளபதிகளை சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் படைத்தளபதிகள் நால்வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

மரணத்துக்குப் பிந்திய விருப்பம் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சோபித தேரரின் காணொளி

தனது உடலை தகனம் செய்யாமல், உறுப்புகளை தானம் செய்த பின்னர் புதைக்க வேண்டும் என, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் விருப்பம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை மறுநாள் வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் – கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கு கிழக்கில், நாளை மறுநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று 31 அரசியல் கைதிகளுக்குப் பிணை – உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மறுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தவறியது கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்குத் தழுவிய போராட்டத்தை நடத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடத் தவறியுள்ளன.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.  அவ்வாறு எவரேனும் கூறி யிருந்தால் அது தவறானது, எனத் தெரிவித்துள்ளார்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பிணை வழங்குவது அரசியல்வாதிகளின் வாக்குறுதியாம் – கைவிரித்தது சட்டமா அதிபர் திணைக்களம்

அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுவிப்பதாக அரசியல்வாதிகளே வாக்குறுதி வழங்கியதாகவும், அதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் கைவிரித்துள்ளார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.

மீண்டும் வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு – அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை

தீபாவளிக்கு முன்னதாக- முதற்கட்டமாக 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதாக, வழங்கியிருந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய சிறிலங்கா அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகினார்

அவன் கார்ட் சர்ச்சையில் சிக்கிய, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பதவியை விட்டு விலகியுள்ளார்.