வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு,கிழக்கு – இன்று கடும் மழை, சூறாவளி எச்சரிக்கை
சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், வடக்கு கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தினால், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெருமழை பெய்து வருகிறது.