மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சம்பூரில் மாற்று மின்திட்டம் – இன்னும் இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை

சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதா அல்லது அனல் மின் நிலையத்தை அமைப்பதா என்பது குறித்து சிறிலங்கா இன்னமும் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

வியாங்கொட ஆயுதக் களஞ்சியம் அம்பேபுஸ்ஸவுக்கு மாற்றம்

வியாங்கொட இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பிரதான ஆயுதக் களஞ்சியத்தை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சி்றிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் கடல் பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்த 2.4 பில்லியன் ரூபாவை வழங்குகிறது ஜப்பான்

கடல்சார்  பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது.

ஐதேகவில் இணைந்தார் சரத் பொன்சேகா – களனி அமைப்பாளராக நியமனம்

சிறிலங்காவின் அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று காலை நடந்த நிகழ்வில் அவர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உறுப்பினராக இணைந்தார்.

சிறிலங்கா கடற்படை அதிகாரியின் பதவியிறக்கத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா கடற்படைத் தளபதியினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு, பதவியிறக்கம் செய்யப்பட்ட, கடற்படைப் புலனாய்வு அதிகாரியான லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுக்கான தண்டனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் பான் கீ மூன்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவரிடம் 3 மணிநேரம் விசாரணை

தீவிரவாத விசாரணைப் பிரிவின் (ரிஐடி) முன்னாள் தலைவரான, ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு நேற்று மூன்று மணிநேரம் விசாரணைகளை நடத்தியுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா விண்ணப்பம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சிறிலங்காவின் மோசமான முன்னுதாரணம் – டியூ குணசேகர குற்றச்சாட்டு

பொது நிதியைச் செலவிட்டு, பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்புக்கு பரப்புரை செய்வதற்காக பிரதிநிதிகளை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெறிமுறை உரிமை ஏதும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.