மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ராஜ் ராஜரத்தினத்துக்கு நிபுணத்துவ உதவிகளையே வழங்கினேன் – சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர்

உள்ளக பங்கு வர்த்தக மோசடிக் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரத்தினத்துக்கு தாம் நிபுணத்துவ சேவைகளை மாத்திரமே வழங்கியதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சுஸ்மாவுடன் பேசினார் மலிக் சமரவிக்கிரம

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமைச்சர்களை சிறைக்கூண்டுக்குள் அடைத்தார் சிறிலங்கா அதிபர்

புதிதாகத் திறந்து வைத்த மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர் பணியகத்தில், சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள், அமைச்சர்களை அடைத்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறி்சேன.

மத்திய வங்கி ஆளுனருக்கு நியமனக் கடிதம் வழங்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கான நியமனக் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கினார்.

ஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது சிறிலங்கா – ஆய்வு அமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அளித்திருந்த வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட, வெரிட்டே என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவா தீர்மான விடயத்தில் சிறிலங்கா, அமெரிக்காவுடன் இணக்கப்பாடு இல்லை என்கிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கம், அமெரிக்கா இடையே உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

விழிப்பு நிலையில் சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புகள்

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நாட்டின் புலனாய்வுஅ அமைப்புகள் ஏற்கனவே, விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கே? – ஒரு வாரத்துக்குள் முடிவு

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள இழுபறிக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில்

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த தெலங்கானா மாநிலம் அக்கறை

சிறிலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளுடன், சுற்றுலா, சுகாதாரம், சமூகத் துறைகளில், உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக இந்தியாவின் தெலங்கானா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.