மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐரோப்பியரை விட ஐந்து மடங்கு அதிகம் மதுபானங்களை நுகரும் இலங்கையர்கள் – அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவின் தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சிறிலங்கா இடையே பாலம் அமைப்பது குறித்து உயர்மட்டப் பேச்சு – உறுதிப்படுத்தியது சிறிலங்கா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிடம் இழப்பீடு கோருவதைக் கைவிட்டது சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்தமைக்காக, சிறிலங்காவிடம் இழப்பீடு கோரும் முடிவை சீன நிறுவனம் கைவிட்டுள்ளதையடுத்து, சீனாவுடன் இதுபற்றிய புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கு இந்தியாவே காரணம் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட  கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இந்தியாவின் அழுத்தங்களினால் தான் இடைநிறுத்தப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஒரே சீனா கொள்கையையே சிறிலங்கா பௌத்தர்கள் ஆதரிக்கின்றனர் – அஸ்கிரிய பீடாதிபதி

சிறிலங்கா பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என்று அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அடுத்தமுறை வெறும் கையுடன் திரும்பமாட்டோம் – மகிந்த சூளுரை

அடுத்த முறை வீதியில் இறங்கும் போது, வெறும் கையுடன் திரும்பமாட்டோம், தேவையான இடங்களில் ஆதரவாளர்களை நிறுத்தி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வோம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இன்று இந்தோனேசியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டுநாள் அதிகாரபூர்வ பயணமாக, இன்று இந்தோனேசியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

சிறிலங்காவின் கோரிக்கையை நிராகரித்தது சீனா

மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகாரச் செயலராக நாளை பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

சிறிலங்காவின் புதிய  வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நாளை பதவியேற்கவுள்ளார். புதுடெல்லியில் சிறிலங்காவுக்கான தூதுவராக கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றிய எசல வீரக்கோன், புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்காக நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து கொழும்பு திரும்பினார்.

மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர், முக்கிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.