மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்தியா கோரிக்கை

எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர் தொடர்பாக ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய, ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ என்ற நூல் நேற்று முன்தினம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்காவின் கரிசனைகள் தொடரும் – ஜோன் கெரி

அவசரமான- மோசமான மனித உரிமைகள் கரிசனைகள் குறித்து அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் வலுப்படுத்தப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றுகிறது சீனா

நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீன நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

200 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி சார்ஜன்ட் மேஜர் எதிரிசிங்க ஜெயமான்னேயுடன் பணியாற்றிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்யப்படவுள்ளனர்.

தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது – சிறிலங்கா அதிபர்

அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 3000 தொட்டிகளை அமைக்கவுள்ளது இந்தியா

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் தவறுகளை இழைத்துள்ளனர் – ஒப்புகொள்கிறார் காவல்துறை மா அதிபர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்ற மாணவர்கள் முன்னால் இருந்து சுடப்பட்டது எப்படி? – சம்பந்தன் கேள்வி

யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பிரகீத் கடத்தல் வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.