மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா துறைமுகங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரான்ஸ்

சிறிலங்காவின் துறைமுகங்களில், குறிப்பாக கொழும்பு துறைமுகம் தொடர்பாக இடம்பெற்று வரும் மாற்றங்களை பிரான்ஸ் உன்னிப்பாக பின்தொடர்ந்து வருகிறது. ஏனென்றால், பிரெஞ்சு நிறுவனங்கள், இங்கு கால்வைப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளன என்று சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வரட்சியால் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா அறிக்கை

சிறிலங்காவில் வரட்சி மற்றும் வெள்ளத்தினால் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக, ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீது சரத் வீரசேகர முறைப்பாடு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  மோனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் றியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சம்பந்தன் நீண்ட பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணா வீழ்ச்சி – டொலரின் மதிப்பு 155 ரூபாவைக் கடந்தது

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.

27 வயதில் ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராகிறார் சிறிலங்கா பெண்

சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கட்டாரில் உள்ள இலங்கையர்களை வெளியேற்றும் திட்டம் இல்லை

கட்டாரில் உள்ள இலங்கையர்களை அவசரமாக வெளியேற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று கொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது. கட்டாரில் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.

காணாமல்போனோருக்கான பணியகம் மிகவும் அவசியம் – அமெரிக்க தூதுவர்

காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐ.நா நிபுணரின் அறிக்கை நாட்டின் இறைமையை மீறுகிறது – சிறிலங்கா பாய்ச்சல்

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை, சிறிலங்காவின் இறைமையை மீறியுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.