மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஜப்பானிய காவல்துறையினர் மீது இலங்கையர்கள் தாக்குதல் – சிறிலங்கா திருவிழாவில் சம்பவம்

ரோக்கியோவில் சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் ஜப்பானிய காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணசபையில் ஊழல் நடக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணசபையில் நிதி ஊழல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்டறிந்தார் அமெரிக்க தூதுவர்

அண்மையில் சிறிலங்காவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், பாகிஸ்தான் பயணத்தைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக, கூட்டு எதிரணியின் பேச்சாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்

மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கான தூதுவராக கருணாசேன ஹெற்றியாராச்சியை நியமிக்க நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை ஜேர்மனிக்கான தூதுவராக நியமிப்பதற்கான, ஒப்புதலை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அளித்துள்ளது.

காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது பிரித்தானியா

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

காணாமல்போனோருக்கான பணியகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச்சபை

மிகவும் தாமதிக்கப்பட்டு விட்ட காணாமல் போருக்கான பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

ஜனநாயகத்துக்கு சவால் விடும் போது மௌனமாக இருக்க முடியாது – ரவி கருணாநாயக்க

நாட்டு மக்களைப் பணயம் வைக்கும் வகையில், சிறியதொரு அடிப்படைவாதக் குழு, ஜனநாயகத்துக்குச் சவால் விடும் போது, மக்களின் அரசாங்கம் ஒன்றினால் மௌனமாக இருக்க முடியாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கபொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.