மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலரும் சிறிலங்கா வந்துள்ளார்

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும், கலாநிதி அமி சீரைட் என்ற உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

மடுவில் கண்ணிவெடி அகற்றினார் மங்கள – ஒட்டாவா உடன்பாட்டில் கையெழுத்திட இணக்கம்

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் சுமுகமான அதிகார மாற்றம் – 2015இன் சாதனை என்கிறார் பான் கீ மூன்

சிறிலங்காவில் கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், சுமுகமான அதிகாரக் கைமாற்றமும் அரசியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கத்தில் அமெரிக்கா உறுதி – தோமஸ் சானொன்

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கம், சுபீட்சம் ஆகியவற்றில் அமெரிக்கா உறுதி பூண்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப் பதவியேற்கவுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் இந்தியத் தூதுவர் முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு உதவி – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் இன்று கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக நியமனம் பெறவுள்ளவரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகராகப் பணியாற்றுபவருமான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு இன்று  பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்தியாவிடம் தொடருந்துகள் கொள்வனவு செய்யும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார்.

முற்றுகிறது முறுகல் – சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.