மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா அமைப்பாகிய நிலையான அபிவிருத்தித் தீர்வுகளுக்கான வலையமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இராணுவச் சிப்பாயை காட்டுக்குள் உதைத்துக் கொன்றார் கோத்தா – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றிய போது, இராணுவச் சிப்பாய் ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

தன்மீதான தாக்குதலுக்கு உதவிய புலி உறுப்பினரை விடுவிக்கக் கோருகிறார் சரத் பொன்சேகா

தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த உதவியவர் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி்களின் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்திய அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆராய்கிறது

பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீபாவில் கையெழுத்திட மறுத்ததால் இந்தியாவே மகிந்தவைத் தோற்கடித்து – விமல் வீரவன்ச

சீபா உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க இந்தியா வெளிப்படையாகவும், இரகசியமாகவும், பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணி்யின் தலைவர் விமல் வீரவன்ச.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் மின்சார மற்றும் புதுப்பிக்கவல்ல சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளரச மரத்துடன் மற்றொரு புத்தர் சிலை

கிளிநொச்சியில் புதிதாக புத்தர் சிலையுடன் கூடிய  பௌத்த வழிபாட்டு இடம் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையா? – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையென்றால், நல்லாட்சியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தலையில் கனரக ஆயுதங்களைக் கட்டிவிடத் துடிக்கும் பாகிஸ்தான்

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் முடிவு – சீன நிறுவனம் வரவேற்பு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதை வரவேற்றுள்ள சீன நிறுவனம், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.