மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமெரிக்காவிடம் இருந்து கோத்தாவைப் பாதுகாக்கும் சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு அமெரிக்காவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

மணலாறு பிரதேசத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மணலாறு பிரதேசத்தில், சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், தீவிரப்படுத்தியிருக்கிறது.

சிறிலங்காவில் அமெரிக்க கடற்படையின் சிறப்பு நடவடிக்கைத் தளபதி

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பணியகத்தின் தளபதி, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் கைச்சாத்து

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் நேற்று கையெழுத்திட்டன. புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்துலக உடன்பாடு நேற்று நியூயோர்க்கில் கையெழுத்திடப்பட்டது.

சீனாவுடனான சிறிலங்காவின் உடன்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளது இந்தியா

சீனாவிடம் சிறிலங்கா பெற்றுள்ள கடன்களை, பங்கு முதலீடாக மாற்றுவது தொடர்பாக, சீனாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ள திட்டத்துக்கு இந்தியா தனது கவலையை தெரிவிக்கவுள்ளது.

ரஷ்யாவிடம் போர்க்கப்பலை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஸ்யாவிடம் இருந்து ஜிபாட் வகை போர்க்கப்பல்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக ரஸ்ய ஊடகமான ஸ்புட்னிக்  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா மீதான கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்குவதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவதற்கு, நீண்ட கலந்துரையாடல்களின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில் சிறிலங்கா 141ஆவது இடத்தில்

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டு, 141ஆவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்எவ் எனப்படும், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால்,  2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆழ்கடல் கண்காணிப்பு – வெளிநாடுகளின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்துகிறது சிறிலங்கா

மாலைதீவுக்கும், மலாக்கா நீரிணைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை பாதுகாப்பான கடற்பாதையாக மாற்றும், சிறிலங்கா கடற்படையின் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்த பல்வேறு நாடுகளின் உதவியை சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்ளவுள்ளது.

வெளிநாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள்

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடனான உறவகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.