மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கின்றன- ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் இப்போதும் சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் நான்கு மேஜர் ஜெனரல்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு

சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

நைஜீரியாவுக்கு 9 ரோந்துப் படகுகளை விற்பனை செய்தது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.

சிறிலங்கா மீதான தடையைத் தளர்த்தியது அமெரிக்கா

சிறிலங்கா மீதான நீண்டகால இராணுவத் தளபாட வர்த்தகத் தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் மானவடு இறந்த செய்தி அறிந்ததும் அவரது இல்லத்துக்கு ஓடினார் மகிந்த

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.

படுகாயமடைந்திருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்று காலை மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவம் பிரியாவிடை

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

வவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சோதனை

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொகோஸ் தீவு வந்த சிறிலங்கா அகதிகளை இரகசியமாகத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த அகதிகள், இரவோடிரவாக இரகசியமான முறையில், விமான மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா இன்று இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.