மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அம்பாந்தோட்டை குறித்த குற்றச்சாட்டுகள் – சிறிலங்கா அதிபரிடம் சீனத் தூதுவர் கவலை

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.

ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை

இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது – முன்னாள் படை அதிகாரிகள் வலியுறுத்தல்

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை, சிறிலங்கா இராணுவத்தினர் விட்டுக் கொடுக்கவோ, அங்கு மீள்குடியேற்றம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு – சுமந்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் சிங்கள ஜூரிகள் சபை அளித்த தீர்ப்பை நிராகரித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வான்கலம் ஒன்றின் பாகம் களுவாஞ்சிக்குடியில் கரையொதுங்கியது

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி கடற்கரையில், வான்கலம் ஒன்றின் பாகம் என்று நம்பப்படும், 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கரில் 95 வீதம் அரச காணிகள்

அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 90 – 95 வீதமான காணிகள், அரச காணிகளே என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்? – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரணவிலவில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா – அந்த இடத்தைப் பிடிக்க சீனா முயற்சி

இரணவிலவில் உள்ள, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.