அம்பாந்தோட்டையில் இன்று 10 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கிறது அமெரிக்க கடற்படை
அமெரிக்க- சிறிலங்கா போர்க்கப்பல்கள் இன்று தொடக்கம் 10 நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளன.
அமெரிக்க- சிறிலங்கா போர்க்கப்பல்கள் இன்று தொடக்கம் 10 நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளன.
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரியுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், நல்லிணக்க விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்த, முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜெனிவாவில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்ற விடயத்தை நீ்ர்த்துப் போகச் செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, கருணா மற்றும் பிள்ளையான் மீது இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும், புதிய தீர்மான வரைவு வெளியாகியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான ‘யுஎஸ்என்எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.