அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்கவில்லை – சிறிலங்கா பிரதமர்
முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.